2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பிடிவாதம் காரணமாகவே முதலமைச்சரை நியமிப்பதில் இழுபறி: அமீர் அலி

Sudharshini   / 2015 மார்ச் 03 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

கிழக்கு மாகாணத்தில் தனித்து ஆட்சி அமைக்கவேண்டும் என்று பிடிவாதமாக இருந்த காரணத்தினால்தான் மீண்டும் முதலமைச்சர் விடயத்தில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக சமுர்த்தி வீடமைப்பு பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் 2014ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் கற்பித்த ஆசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரி முதல்வர் ஏ.ஜி.பிர்தௌஸ் தலைமையில் கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர்  அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தெளிவாக பேசி இருக்கவேண்டும். கிழக்கு மாகணத்திலே இனி வரப்போகின்ற தேர்தலில் ஆளும் தரப்பை நிர்ணயிக்கின்ற அணியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கின்றது என்பதில் எவரும் மாற்றுக்கருத்துக்கொள்ளத் தேவையில்லை.

இம்முறை கிழக்கு மாகாண சபையில் 11 ஆசனங்களைப் பெற்றிரக்கின்றார்கள். எதிர்வரும் காலங்களிலே போனஸ் ஆசனங்கள் அடங்களாக 16 ஆசனங்களை எடுத்து ஆட்சி அமைக்கின்ற போது; அதில் எங்களுக்கும் பங்கை தருவார்கள் என்று நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன்.

அந்த எதிர்பார்ப்புக்கு நாங்கள் இப்பொழுது செய்ய வேண்டியது அவர்களுடைய எதிர்பார்ப்பில் 100 வீதம் கொடுக்க முடியாவிட்டாலும், முடிந்தவரை அவர்களது கோறிக்கைகளை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் நிறைவேற்றிக் கொடுக்கவேண்டும். இல்லை என்று சொன்னால் கிழக்கு மாகாணத்திலே காலங்காலமாக அதிகாரங்களை பெற்றுக்கொள்ள முடியாத ஒரு காலகட்டம் ஏற்படலாம்.

அரசியல் என்பது உடனடிப் பிரச்சினைக்கு உடனடி தீர்மானம் காண்கின்ற விடயம் மாத்திரம் அல்ல, எதிர்காலத்திலே வரக்கூடிய பிரச்சினையை மையப்படுத்தி ஒரு தூர நோக்கத்தோடு நாங்கள் செயற்பட வேண்டும்.

கிழக்கு மாகாண சபை இவ்வாறு தொடர்ந்து பிரச்சினைகளோடு நடந்து கொண்டு இருக்கும் என்று சொன்னால், நான் நினைக்கிறேன் அவசர அவசரமாக மாகாண சபை கலைக்கப்படலாம் என்ற ஒரு விடயமும் அதில் மறைந்து கிடக்கின்றது என அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.அஹமட் லெப்பை, பிரதி கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம்.அஸ்ரப், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.பி.எம்.காலித், ஹைராத் ரான்ஸ்போட் நிருவாகசபை பொருலாளர் எம்.எஸ்.அன்வர் மற்றும் பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X