2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் முச்சக்கரவண்டிச் சாரதி மரணம்

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 17 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எஸ்.பாக்கியநாதன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, ஏறாவூர் நகரில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ள வாகன விபத்தில் முச்சக்கரவண்டிச் சாரதி ஒருவர் சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு - மட்டக்களப்பு பிரதான நெடுஞ்சாலையோரத்தில்  நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியுடன் சடலம் ஒன்றை ஏற்றிவந்த கார் மோதியுள்ளது. இதன்போது, முச்சக்கரவண்டிச் சாரதியான ஏறாவூரைச் சேர்ந்த நாகூர் முஹம்மது ஸஹாப்தீன் (வயது 50) என்பவர் மரணமடைந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

பிரேத பரிசோதனைக்காக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மேற்படி  கார் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X