2025 மே 17, சனிக்கிழமை

சட்டவிரோதமாக மாடுகளை ஏற்றிச்சென்ற இருவர் கைது

Suganthini Ratnam   / 2015 மே 13 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக 14  மாடுகளை ஏற்றிவந்த வாகனத்துடன்,  இரண்டு சந்தேக நபர்களை  வாழைச்சேனை பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கைதுசெய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

புனாணை, ரிதிதென்ன பகுதியிலிருந்து கல்முனை பிரதேசத்துக்கு கொண்டுவரப்பட்டபோதே,  இந்த மாடுகளுடன் வாகனம் பொலிஸாரினால்  கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த மாடுகளை ஏற்றிவந்த சந்தேக நபர்கள் இருவரும் கல்முனையைச் சேர்ந்தவர்கள் என்றும் மாடுகளை ஏற்றிச் செல்வதற்கான எந்தவித ஆவணங்களும் இவர்களிடம் இல்லை என்றும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .