2025 மே 16, வெள்ளிக்கிழமை

புகையிரதத்தில் மோதுண்டு யானை படுகாயம்

Suganthini Ratnam   / 2015 ஜூன் 22 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் யானையொன்று மோதுண்டு   படுகாயமடைந்துள்ளதாக வன விலங்கு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொலன்னறுவை, வெலிகந்த புகையிரத நிலையத்துக்கு  அண்மையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட இந்த  விபத்தின்போது, புகையிரதத்தில் மோதுண்ட இந்த  யானை தூக்கி எறியப்பட்டதாக  புகையிரத ஊழியர்கள் தெரிவித்தனர்.

சோமாவதி வனப்பகுதியில் உலாவும் இந்;த யானையின் பின் கால்கள் இரண்டும் செயலிழந்துள்ளன. இந்த யானைக்கு சிகிச்சை வழங்குவதற்காக  கிரித்தலை மிருக வைத்தியசாலைக்கு வன விலங்கு திணைக்கள அதிகாரிகளினால் கொண்டு செல்லப்படவுள்ளதாக வன விலங்கு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .