2025 மே 15, வியாழக்கிழமை

வலையில் சிக்கியது மீனவரின் சடலம்

Suganthini Ratnam   / 2015 ஜூலை 16 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

வலையில் சிக்கியவாறு மீனவர் ஒருவரின் சடலம் அம்பாறை, ஒலுவில் ஆழ்கடலிலிருந்து நேற்று புதன்கிழமை அதிகாலை  மீட்கப்பட்டதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

சாய்ந்தமருது -15, அல்ஹிலால் வீதியைச் சேர்ந்த உதுமான்கண்டு அபூபக்கர் (வயது 55) என்பரது சடலமே மீட்கப்பட்டது.
ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுவதற்காக  ஒலுவில் கடலுக்கு படகொன்றில் மூன்று பேர் செவ்வாய்க்கிழமை (14) சென்றிருந்தனர். இந்நிலையில், நள்ளிரவை தாண்டி கடலில் வலை போட்டுக்கொண்டிருந்தபோது, படகின் பின்புறத் தொங்கலில் நின்ற இந்த மீனவர் காணாமல் போயுள்ளார். இதைத் தொடர்ந்து இந்த மீனவரை பிறிதொரு படகின் உதவியுடன் தேடியுள்ளனர். அப்போதே, வலையில் இந்த மீனவரின் சடலம் சிக்கியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .