2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

காத்தான்குடியிலுள்ள ஆயுர்வேத வைத்திய பாதுகாப்புச்சபையை புனரமைக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 16 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள  ஆயுர்வேத வைத்திய பாதுகாப்புச்சபையை புனரமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம், காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சனிக்கிழமை (15) மாலை நடைபெற்றது.

சுதேச வைத்திய அமைச்சின் கீழுள்ள ஆயுர்வேத திணைக்களத்தினால் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு;ள்ளது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆயுர்வேத வைத்தியர்களை அடையாளம் கண்டு அவர்களை இந்த ஆயுர்வேத பாதுகாப்புச் சபையில் உள்வாங்குவது எனவும் இதற்கான விண்ணப்பப்படிவங்களை அவர்களுக்கு வழங்கவும்  மேற்படி கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் காத்தான்குடி ஆயுர்வேத மத்திய மருந்தக பொறுப்பதிகாரி டாக்டர் ஏ.எல்.எம்.ஜலால்தீன் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆயுர்வேத வைத்தியர்கள்  உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X