Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 23 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு, வெல்லாவெளியைச் சேர்ந்த 34 வயதுடைய எனது மகன் மாணிக்கப்போடி ரஞ்சுதன் என்பவர் எமது கிராமத்துக்கு அருகிலுள்ள தும்பாலை எனும் இடத்தில் கருங்கல் குவாறியில் கல் உடைக்கும் தொழில் செய்துவந்தார். கடந்த 2008.09.04 அன்று வழக்கம்போல் எமது வீட்டிலிருந்து புறப்பட்டு தொழிலுக்குச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என்று காணாமல் போனவர்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில்; காணாமல் போன ரஞ்சுதனின் தாய் சாட்சியமளித்துள்ளார்.
களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அமர்விலேயே அவர் மேற்கண்டவாறு சாட்சியம் அளித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், 'எனது மகன் கருங்கல் உடைத்து எமது குடும்பத்தை வழிநடத்தி வந்தார். தற்போது அவரில்லாமல் வருமானத்திற்கும் வழியில்லாமல் தவித்துக்கொண்டிருக்கின்றோம்.
எனது மகன் தொழில் செய்யும் இடத்திற்கு அருகில் விசேட அதிரடிப்படையினரும் கருணா குழுவினரும் இருந்தார்கள.; எனது மகனை அவர்களர்தான் பிடித்துக்கொண்டு போயிருப்பார்கள். எனவே எனது மகனை எங்கிருந்தலும் கண்டுபிடித்துத்தாருங்கள்' என அவர் காணாமல் போனவர்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிடம் கோரிக்ககை விடுத்தார்.
3 minute ago
6 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
6 minute ago
1 hours ago