2025 மே 03, சனிக்கிழமை

22 எருமை மாடுகளை கொண்டு சென்ற இருவர் கைது

Editorial   / 2020 ஏப்ரல் 24 , பி.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக இருவேறு சந்தர்ப்பங்களில் கொண்டுசெல்லப்பட்ட எருமை மாடுகளை, சவளக்கடை பொலிஸார் மீட்டுள்ளனர்.

அம்பாறை, சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இருந்து நற்பிட்டிமுனை பிரதேசத்துக்கு வழித்தடை அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டுசென்ற 13 எருமை மாடுகள், இன்று (24) அதிகாலை 5 மணியளவில் மீட்கப்பட்டன.

அதேநேரம், மற்றுமொரு  சந்தர்ப்பத்தில் 9 எருமை மாடுகள் சவளக்கடை பகுதியிலிருந்து சம்மாந்துறை பிரதேசத்துக்கு கொண்டு சென்ற  நிலையில்  மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு எருமை மாடுகளை சட்டவிரோதமாக கொண்டு சென்ற இரு சந்தேக நபர்களை கைது செய்துள்ள சவளக்கடை பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X