2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

867 விவசாயிகளுக்கு நட்டஈடு

Suganthini Ratnam   / 2014 ஜூன் 22 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்,ரீ.எல்.ஜவ்பர்கான்


2013ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில்;  வறட்சியால் பாதிக்கப்பட்ட 867 விவசாயிகளுக்கு நட்டஈட்டு காப்புறுதி கொடுப்பனவு  ஞாயிற்றுக்கிழமை (22) வழங்கப்பட்டன.

இதன்போது, மேற்படி விவசாயிகளுக்கு  12.5 மில்லியன் ரூபா வழங்கப்பட்டன.

கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச் சபையின் தலைவர் ஆரியரட்ண தகாநாயக்க தலைமையில் தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மட்டக்களப்பு மாவட்ட  அரசாங்க  அதிபர் திருமதி  பி.எஸ்.எம்.சாள்ஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா, கமநல காப்புறுதிச் சபையின் மாவட்ட பொதுமுகாமையாளர் பந்துல வீரசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .