2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

அபிவிருத்திக்குழுக் கூட்டங்களுக்கு ஊடகவியலாளர்களை அழைக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2017 மார்ச் 29 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் ஊடகவியலாளர்கள் கலந்துகொள்ளும் வகையில் அவர்களுக்கு முறையாக அழைப்பு விடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம் பிரதேச செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (28) மாலை நடைபெற்றது. இதன்போது, பிரதேச செயலகங்களில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக செய்தி சேகரிப்பதற்கு  ஊடகவியலாளர்கள் அழைக்கப்படுவதில்லை. இது ஏன் என்று இக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.

இதனை அடுத்து, இனிமேல் நடைபெறும் அபிவிருத்திக் குழுக் கூட்டங்களுக்கு  ஊடகவியலாளர்களை  முறையாக அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
 
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X