2025 மே 08, வியாழக்கிழமை

ஆணின் சடலம் மீட்பு

Niroshini   / 2015 டிசெம்பர் 06 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு,காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆணின் சடலமொன்றை மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

ஆரையம்பதி, செல்வாநகர்,காளிகோவில் வீதியை சேர்ந்த சரவணமுத்து நல்லதம்பி (வயது 58)என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார்,குறித்த நபரை அவரது வீட்டுக்கருகிலிருந்து சடலமாக மீட்டுள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X