2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Janu   / 2024 பெப்ரவரி 22 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு , களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு குடியிருப்பு கிராமத்தின் வீதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் புதன்கிழமை (21) மாலை மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

தேற்றாத்தீவு குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த 84 வயதுடைய ஆறுமுகம் கிருஸ்ணபிள்ளை என்பவரே  இவ்வாறு  சடலமாக  மீட்கப்பட்டுள்ளார் .

குறித்த கிராமத்தின் தாழ் நிலத்தை அண்டியுள்ள வீதியில் சடலம் ஒன்று கிடப்பதாக பொலிஸாருக்கு  கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே களுவாஞ்சிகுடி பொலிஸார் இஸ்த்தலத்திற்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் .

மேலும்  , குறித்த  சடலம்  பிரேத பரிசோதனைக்காக  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வ.சக்தி 

    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X