2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

ஆரையம்பதியில் 87 அபிவிருத்திகள்

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2017 ஜூலை 17 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆரையம்பதி பிரதேச செயலகப்பிரிவில், இவ்வாண்டு 30 மில்லியன் ரூபாய் செலவில் 87 அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்யப்பட்டு வருவதாக, பிரதேச செயலாளர் திருமதி என்.சத்தயானந்தி தெரிவித்தார்.

கல்வி, வீடமைப்பு, சுகாதாரம், விளையாட்டு, சமூகசேவை முற்றும் கிராமிய அபிவிருத்தி உள்ளிட்ட பல அத்தியாவசிய தேவைகளுக்கான அபிவிருத்திப் பணிகளே இடம்பெற்றுவருகின்றன.

கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தயின் கீழ், 27 வேலைத்திட்டங்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களின்  பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 21 திட்டங்களும், கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சால் 6 திட்டங்களும், நல்லிணக்கம்சார் பொருளாதார அபிவிருத்தித் திட்டத்திட்டத்தின் கீழ், 8 அபிவிருத்திப் பணிகளும், பிரமாண அடிப்படையிலான அபிவிருத்தி திட்டத்தின்கீழ் 2 திட்டங்களும், இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 4 திட்டங்களுமாக இவை இடம்பெற்று வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X