2025 மே 02, வெள்ளிக்கிழமை

இனந்தெரியாதோரால் வீட்டுக்குத் தீ வைப்பு

Editorial   / 2020 ஜூன் 01 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.திவாகரன்

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதலைக்குடா மேற்குப் பிரிவிலுள்ள வீடொன்றுக்கு இனந்தெரியாதோரால் தீ வைக்கப்பட்ட சம்பவம் இன்று (01) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டில் மூவர் இருந்த நிலையில் குறித்த வீட்டுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இதன்போது,  யாருக்கும் பாதிப்பு ஏற்படாத நிலையிலும் குறித்த மண் வீட்டின் மேற்கூரை,  வீட்டில் இருந்த பொருள்கள் என அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

இது தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X