Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 21 , மு.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா, எப்.முபாரக்
திருகோணமலை மாவட்டத்தில் சனிக்கிழமை (20) மாலை இடம்பெற்ற இருவேறு விபத்துகளில் படுகாயமடைந்த நால்வர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாவடிச்சேனைப் பகுதியில் மோட்டார் சைக்கிளொன்றும் சைக்கிளொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், மூன்றரை வயதுச் சிறுவன் ஒருவன் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
முட்டிச்சேனைப் பகுதியைச் சேர்ந்தவர்களான சைக்கிளில் சென்ற டி.மாணிக்கராசா (வயது 55), மோட்டார் சைக்கிளில் சென்ற எம்.ரூபன் (வயது 25), மற்றும் இவரது மகனான ஆர்.நிலக்சன் (வயது மூன்றரை) ஆகியோரே படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உடனடியாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் இம்மூவரும் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிறுவன் மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளான்.
இவ்வாறிருக்க, கந்தளாய்ப் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளொன்றும் முச்சக்கரவண்டியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்ததைத் தொடர்ந்து கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கந்தளாய் பகுதியைச் சேர்ந்த மோட்டார் சைக்கிளில் சென்ற முகம்மட் அஸாம் (வயது 27) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கரவண்டியுடன் மோதியதாக தெரியவருகின்றது.
இவ்விபத்தைத் தொடர்ந்து முச்சக்கரவண்டிச் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இவ்விபத்துகள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago
9 hours ago