Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2017 செப்டெம்பர் 18 , பி.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏறாவூரில் தாய், மகள் இருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அறுவரில் இருவருக்கு, கடந்த 12ஆம் திகதி, மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டிருந்தது.
எனினும், பிணை வழங்கப்பட்ட சந்தேகநபரான இஸ்மாயில் முஹம்மது பாஹிர் (வயது 25) என்பவர், பிணைத் தொகையான இரண்டரை இலட்சம் ரூபாய் பணத்தைச் செலுத்தத் தவறியதால், தொடர்ந்தும் சிறையில் உள்ளாரென, உறவினர்கள் தெரிவித்தனர்.
அடுத்த ஓரிரு தினங்களில் தாம் குறித்த பணத்தொகையைச் செலுத்தி சந்தேகநபரை சிறையிலிருந்து வெளியே எடுக்க முயற்சிப்பதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
தமக்குப் பிணை வழங்குமாறு கேட்டு சந்தேகநபர்கள் இருவரால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம். இர்ஸதீன் முன்னிலையில் கடந்த 12ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேகநபர்களைப் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
ஏறாவூர் ஆதார வைத்தியசாலை பின் ஒழுங்கையைச் சேர்ந்த இஸ்மாயில் முஹம்மது பாஹிர் (வயது 25) ஏறாவூர் காட்டுப்பள்ளி வீதியைச் சேர்ந்த அபூபக்கர் முஹம்மது பிலால் (வயது 50) ஆகியோர் தலா இரண்டரை இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் தலா 5 இலட்சம் ரூபாய் கொண்ட இரண்டு சரீரப் பிணைகளிலும் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த வருடம் 2016 செப்ரெம்பெர் மாதம் 11ஆம் ஏறாவூர் நகர பிரதேசத்தில் முகாந்திரம் வீதி முதலாவது குறுக்கு ஒழுங்கையிலுள்ள வீட்டில் வசித்துவந்த தாயான நூர்முஹம்மது உஸைரா (வயது 56) அவரது திருமணமாகிய மகள் ஜெனீராபானு மாஹிர் (வயது 32) ஆகியோர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட 6 சந்தேகநபர்களும் கடந்த வருடம் செப்டெம்பர் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக விளக்கமறியல் உத்தரவில் இருந்து வந்தநிலையில் குறித்த இருவருக்குப் பிணை வழங்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .