2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

இறால் பண்ணையாளர்களுக்கு காணி ஒதுக்கீடு

Mayu   / 2024 மார்ச் 15 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச் ஹஸ்பர் 

கிழக்கு மாகாணத்தின் மீன்பிடித் தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூர் விவசாயிகளின் சிறிய அளவிலான இறால் பண்ணை திட்டங்களுக்கான காணிகளை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஒதுக்கீடு செய்தார். 

மண்முனை தென்மேற்கு பிரதேசசெயலகம் பட்டிப்பளையில் வியாழக்கிழமை (14)  இடம்பெற்ற இந்நிகழ்வில்  இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனும் கலந்து  கொண்டார்.

இதன்போது பயனாளிகளுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள் ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .