Suganthini Ratnam / 2016 நவம்பர் 08 , மு.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
இலங்கையில் 17 இலட்சம் பேர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளதுடன், அவர்களில் 15 இலட்சம் பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் மேல்மாகாண மேலதிகத் தேர்தல் ஆணையாளர் சமன்சிறி ரத்நாயக்க தெரிவித்தார்.
'ஆளுகை விவகாரங்கள் மற்றும் செயற்பாடுகளில் மாற்றுத்திறனாளிகளின் செயற்பாடுகளுடனான குடியுரிமை, பங்கேற்பை மேம்படுத்துதல்; எனும் தொனிப்பொருளிலான செயலமர்வு, மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் இன்று செவ்வாய்க்கிழமை இலங்கைத் தேர்தல் திணைக்களம் மற்றும் கமீட் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
வாக்களிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ள தடைகள் தொடர்பாக அரசாங்க அதிகாரிகளுடனான கலந்துரையாடலாக இச்செயலமர்வு நடைபெற்றது.
வாக்களிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ள தடைகள் தொடர்பாக அரசாங்க அதிகாரிகளுடனான கலந்துரையாடலாக இச்செயலமர்வு நடைபெற்றது.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'மாற்றுத்திறனாளிகள் தொடர்பில் நாங்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டியவர்களாக உள்ளோம். உலக சுகாதார ஸ்தாபனத்தின் தகவலுக்கு அமைய உலக சனத்தொகையில் சுமார் ஒரு பில்லியன் பேர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். அது உலக சனத்தொகையில் 15 சதவீதமாக கணிக்கப்படுகின்றது.
மாற்றுத்திறனாளிகளில் 20 சதவீதமானோர் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் வாழ்வதுடன், 80 சதவீதமானோர் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் வாழ்கின்றனர்' என்றார்.
'இலங்கையில் 2015ஆம் ஆண்டு ஜுலை மாதக் சனத்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் 2 கோடி 20 இலட்சத்து 53 ஆயிரத்து 488 பேர் வசிக்கின்றனர். இவர்களில் 17 இலட்சம் பேர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர்.
மேலும், பிரதேச செயலகங்களில் மாற்றுத்திறனாளிகள் இலகுவாக வந்துசெல்வதற்கு வழிகள் அமைக்கப்பட வேண்டும். அதனை இங்குள்ள பிரதேச செயலாளர்கள், சபைச் செயலாளர்கள் மேற்கொள்ளவேண்டும்.
4 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
21 Dec 2025