2025 மே 07, புதன்கிழமை

உணவகங்கள், ஊழியர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 24 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு பொதுச் சுகாதாரப் பிரிவுக்குட்பட்ட கல்லடிப் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி செயற்பட்டுவந்த 02 உணவகங்களுக்கும் 05 உணவகங்களில்; மருத்துவச்சான்றிதழ்; இன்றிச் செயற்பட்டுவந்த 13 ஊழியர்களுக்கும் எதிராக தொடரப்பட்ட வழக்கில் 60 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டதாக வெட்டுக்காடு பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதமாலன் தெரிவித்தார்.

கல்லடிப் பகுதியிலுள்ள உணவகங்கள், வெதுப்பகங்கள் உள்ளிட்டவற்றில் திங்கட்கிழமை (23) திடீர்ச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, மேற்படி அனுமதிப்பத்திரமின்றி செயற்பட்டுவந்த 02 உணவகங்களுக்கும் 05 உணவகங்களில்  மருத்துவச்சான்றிதழின்றி கடமையாற்றிய ஊழியர்களுக்கும் எதிராக 15 வழக்குகள் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், 10 வழக்குகளுக்கு தலா 6,000 ரூபாய் படி  தண்டம் விதிக்கப்பட்டது. மேலும், இது தொடர்பான 05  வழக்குகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பொதுமக்கள் சுகாதாரமான உணவுகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் மட்டக்களப்பு சுகாதாரப் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள உணவகங்களில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X