Editorial / 2018 ஏப்ரல் 04 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, லொயிஸ் அவனியுவில் வசிக்கும் ஊடகவியலாளர் சரவணின் வீட்டில் நேற்று (03) பட்டப் பகலில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரண்டரை பவுன் எடையுடைய தங்க நகைகள் மற்றும் 24,500 ரூபாய் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் மேற்படி ஊடகவியலாளர் முறையிட்டுள்ளார்.
வீட்டில் எவரும் இல்லாத நிலையில், வீட்டின் ஜன்னல் கதவுகளை உடைத்து உள்ளே சென்று, அங்கிருந்த அலுமாரி உடைக்கப்பட்டு அதனுள் இருந்த நகைகள், பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago