2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

Janu   / 2024 ஒக்டோபர் 21 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கூழாவடி பிரதேசத்தில் பெண் ஒருவர் தீயில்  எரிந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (20) அன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

கூழாவடியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயாரான 67 வயதுடைய வி.விஜயராணி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

குறித்த பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள  நீரிழிவு நோய்   காரணமாக  ஏற்பட்ட மன அழுத்தத்தால்  சம்பவ தினத்தன்று பகல் வீட்டின் முற்றத்தில் தனக்கு தானே  தீ வைத்துக் கொண்டு   உயிரிழந்துள்ளார்  என தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கனகராசா சரவணன் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .