2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

ஏறாவூர் பிரதேச செயலக இடம்பெயர் சேவை

Editorial   / 2020 ஒக்டோபர் 05 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைந்த இடம்பெயர் சேவை, மங்களகம பிரதேசத்தில் புதன்கிழமை (07) நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் காலை 9 மணி முதல் மங்களகம தர்மராமய விஹாரை வளாகத்தில் இடம்பெறும் அனைத்து வகையான ஒருங்கிணைந்த சேவைகளையும் மக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த இடம்பெயர் சேவையில் பிரதேச செயலகத்தின் அனைத்து சேவைகளும் இடம்பெறுவதோடு பிரதேச சபை, சுகாதார, நீர்ப்பாசன, விவசாயத் திணைக்கள சேவைகள் தேசிய ஆளடையாள அட்டை சமூர்த்தி, உற்பத்தித் தொழிற்துறை விதாதா உட்பட இன்னோரன்ன சேவைகளை மக்கள் பெற்றுக் கொள்ள முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .