2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ஓட்டுணவுகளுக்கு கிராக்கி...

Gavitha   / 2016 டிசெம்பர் 04 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். பாக்கியநாதன்

மட்டக்களப்பில் தற்போது இறால் மற்றும்; நண்டு உள்ளிட்ட ஓட்டுணவுகள், வாவியில் குறைவாகப் பிடிபடுவதனால், அவற்றுக்கு சந்தையில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

அண்மையில் மட்டக்களப்பில் பெய்த மழையின் பின்னர், வாவியில் கிடைக்கும் மீன் வகைகளும் பிடிபடும் அளவும் குறைந்துள்ளதால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்தாக, மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு நகரில் ஞாயிற்றுக்கிழமை ஒரு கிலோகிராம் கோம்பை இறால், 1,500 ரூபாய்க்கும் வெள்இறால் கிலோகிராம் 1,000 ரூபாய்க்கும் நண்டு கிலோகிராம் 500 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 13,858 குடும்பங்கள், வாவித்தொழிலை நம்பி வாழ்கின்றார்கள் என்று மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத் தரவுகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X