Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2021 ஜனவரி 21 , பி.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன், வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு - ஓட்டமாவடி பிரதேசத்தில் இருந்து ஆரையம்பதி பாலமுனை பகுதிக்கு ஓட்டோவில் 7 கிலோகிராம் கஞ்சா கடத்திய நபரொருவரை, போக்குவரத்து பொலிஸார் இன்று (21) கைது செய்துள்ளனர் என மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
போக்குவரத்து பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமைய, மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதி, பிள்ளையாரடி பகுதியில் போக்குவரத்து பொலிஸார் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதன்போது, குறித்த ஓட்டோவை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் அரிசி மற்றும் பலசரக்கு பொருட்களுடன், பிஸ்கட் பெட்டிகளில் பரிசுப் பொருட்கள் போன்று கஞ்சாவை பொதி செய்யப்பட்ட நிலையில் பொலிஸார் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து ஓட்டோ சாரதியைக் கைது செய்ததுடன், 7 கிலோகிராம் கஞ்சாவை கைப்பற்றினர்.
இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
14 Jul 2025
14 Jul 2025