Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 29 , மு.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, மீராகேணிக் கிராமத்திலுள்ள கலந்தர் வீதியில் நின்று குழப்பம் விளைவித்துக்கொண்டிருந்த ஒருவர், அருகிலிருந்த வீட்டினுள் புகுந்து பெண்ணொருவர் மீது கோடரியால் தாக்கியதில் படுகாயமடைந்த அப்பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (28) இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், ஏறாவூரைச் சேர்ந்த சுலைமாலெப்பை றஷ்வியா (வயது 28) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.
உடனடியாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
வீதியில் நின்ற சிலரை உனக்குத் தெரியாதா என்று கேட்ட இச்சந்தேக நபர், அப்பெண்ணின் தலையில் கோடரியால் ஓங்கிக் கொத்திவிட்டுத்; தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ள பொலிஸார், சந்தேக நபரைத் தேடி வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
9 hours ago
12 May 2025