Suganthini Ratnam / 2017 மே 04 , மு.ப. 08:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்மாப் பள்ளிவாசலின் தலைவராக எம்.சி.எம்.சத்தார் தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கிழக்குப் பிராந்திய அலுவல அதிகாரியொருவர் தெரிவித்தார்.
மேலும் உப தலைவர்களாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், மௌலவி எஸ்.எம்.அலியார், மௌலவி ஏ.எம்.அப்துல் காதர் ஆகியோரும் செயலாளராக ஏ.எம்.றபீக்கும்; உப செயலாளர்களாக எம்.எம்.உசனார் மற்றும் எம்.ஏ.கே.எம்.நௌபளும்; பொருளாளராக ஏ.எம்.றஹ்மத்துல்லாவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்மாப் பள்ளிவாசலுக்கு நிர்வாக சபை உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக முதன்முறையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (30) நடத்தப்பட்ட தேர்தலில் 23 பேர் வெற்றி பெற்றுள்ளனர்
இந்த நிர்வாக சபை உறுப்பினர்களுக்கான கூட்டம், முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கிழக்குப் பிராந்திய அலுவலகத்தில் இன்று (4) நடைபெற்றது. இதன்போதே மேற்படி தலைவர், உப தலைவர், செயலாளர், உப செயலாளர், பொருளாளர்; தெரிவு மேற்கொள்ளப்பட்டன எனவும்; அவர் கூறினார்.
பாரம்பரிய முறைப்படி நிர்வாகத்தினர் கூடி, புதிய நிர்வாகத்தைப் பிரேரித்து ஆமோதிக்கும் முறை அல்லது ஏகோபித்த அல்லது பெரும்பான்மை ஆதரவுக்கு அமைய நிர்வாக உறுப்பினர்களைத் தெரிவுசெய்யும் நடைமுறை இதுவரைகாலமும் பின்பற்றப்பட்டது.
ஆயினும், நிர்வாகத் தெரிவில் எழும் சிக்கல், செல்வாக்கு, அழுத்தம்; என்பவற்றைத் தவிர்த்துக்கொள்ளும் வகையில் இம்முறை வெளிப்படையாகத் தேர்தலை நடத்தி, அதன் மூலம் நிர்வாக உறுப்பினர்களைத் தெரிவுசெய்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .