2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

காத்தான்குடியிலுள்ள வீட்டில் திருட்டு

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 25 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, காத்தான்குடி நகரிலுள்ள வீடு ஒன்றில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை நள்ளிரவு தங்கச்சங்கிலி ஒன்றும் 02 அலைபேசிகளும் திருட்டுப் போயுள்ளதாகப்  பொலிஸார் தெரிவித்தனர்.  

குறித்த வீட்டின் பின்கதவை உடைத்துக்கொண்டு உள்நுழைந்த திருடர்கள், அங்கு உறங்கிக்கொண்டிருந்த வயோதிபப் பெண் ஒருவரின் கழுத்திலிருந்த இரண்டரைப் பவுண் தங்கச்சங்கிலியை அறுத்துள்ளதுடன், விலை உயர்ந்த அலைபேசிகள் இரண்டையும்;; திருடியுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரண்டு பேர் வந்து இத்திருட்டை புரிந்துள்ளதாகவும் அவர்களில் ஒருவரை தாம் அடையாளம்; கண்டதாகவும் குறித்த வீட்டில் உள்ளோர் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X