Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 08 , மு.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எஸ்.சபேசன்
மட்டக்களப்பு, ஊறணிப் பிரதேசத்தில் புதன்கிழமை (07) மாலை பயணித்துக்கொண்டிருந்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த இருவர் காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புதன்கிழமை மாலை இவ்விபத்து நிகழ்ந்தது. வீதியில் வேகமாகச் சென்று கொண்டிருந்த கார் சடுதியாக குடை சாய்ந்தது. அந்நேரம் காருக்குள் அகப்பட்டிருந்தவர்களை வீதியால் சென்ற பயணிகள் துரிதமாகச் செயற்பட்டு காரின் கதவை உடைத்து வெளியே இழுத்தெடுத்து வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர்.
ஏறாவூர் பக்கமிருந்து மட்டக்களப்பை நோக்கி கார் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து சம்பவித்தது.
இச்சம்பவம் பற்றி பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago