2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

கேரளக் கஞ்சாவுடன் மூவர் கைது

Kogilavani   / 2017 பெப்ரவரி 19 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியா - கண்டலடியூற்று பகுதியில், நாலரை கிலோகிராம் கேரளக் கஞ்சாவுடன், மூன்று நபர்களை சனிக்கிழமை (18) மாலை கைது செய்துள்ளதாக, கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய, சந்தேகநபர்களின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே, வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரளக் கஞ்சா மீட்கப்பட்டது.

கைதுசெய்யப்பட்டவர்களை, நீதிமன்றத்தில் நாளை (20) ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X