2025 மே 09, வெள்ளிக்கிழமை

கிழக்கு பல்கலையில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 11 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
சீரற்ற காலநிலை காரணமாக கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த கல்வி நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அப்பல்கலைக்கழக பதில் பதிவாளர் அ.பகிரதன் தெரிவித்தார்.
 
மட்டக்களப்பு மாவட்டத்தில்  கடந்த புதன்கிழமை பெய்த அடை மழை காரணமாக வந்தாறுமூலை வளாக மாணவர் விடுதியினுள் வெள்ளம் புகுந்தது.   இதனையடுத்து பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்த  நிர்வாகம் தீர்மானித்தது. தற்போது காலநிலை வழமைக்குத் திரும்பியதையடுத்து இன்று முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X