2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கஞ்சாவுடன் ஆணொருவர் கைது

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
 
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கோரகல்லிமடு பிரதேசத்தில் கஞ்சாவை விற்பனைக்காக தம்வசம் வைத்துக் கொண்டு உள் வீதியில் நடமாடிய குடும்பஸ்தர் ஒருவர், இன்று திங்கட்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
 
பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் ஸ்தலத்துக்குச் சென்ற பொலிஸார், 5190 மில்லிகிராம் கஞ்சாவுடன் 43 வயதான ஆணொருவரையே கைதுசெய்துள்ளனர்.
 
இச்சம்பவம் பற்றி பொலிஸார், மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X