2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கல்குடா வல்வி வலயத்தில் 111 மாணவர்கள் சித்தி

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 09 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

வெளியாகியுள்ள தரம் ஐந்தாம் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு கல்குடா வல்வி வலயத்தில் 111 மாணவர்கள் சித்திபெற்றுள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா தெரிவித்தார்.
 
கல்குடா கல்வி வலயத்தில் ஏறாவூர்ப்பற்று கல்விக் கோட்டத்தில் 69 மாணவர்களும் கோறளைப்பற்று கல்விக் கோட்டத்தில் 40 மாணவர்களும் கோறளைப்பற்று வடக்கு கல்விக் கோட்டத்தில் 02 மாணவர்களும் சித்திபெற்றுள்ளனர்.
 
செங்கலடி மத்திய கல்லூரியில் 25 மாணவர்கள் சித்தி பெற்று வலயத்தில் முதலிடம் பெற்றதுடன் பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலய மாணவன் ஜெகதீசன் தர்ஜீதன் 190 புள்ளிகளைப் பெற்று மாவட்ட ரீதியில் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X