Editorial / 2018 ஜனவரி 27 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, கல்லடி வாவியிலிருந்து, இலங்கை மின்சார சபைப் பொறியியலாளரும் இரு குழந்தைகளின் தந்தையுமான கணேஷமூர்த்தி உமாரமணன் (வயது 34) என்பவரது சடலம், நேற்று (26) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிருஷ்ணன் கோயில் வீதி, கல்லடியைச் சேர்ந்த மேற்படி பொறியியலாளர், கடந்த 24ஆம் திகதி காலை 8 மணியிலிருந்து காணாமல்போயிருந்தாரென, அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
கல்லடிப் பகுதி வாவியில் ஆணொருவரின் சடலம் மிதப்பதாக மீனவர்கள் தெரிவித்ததையடுத்து, அங்கு மீனவர்களின் உதவியோடு சடலம் மீட்கப்பட்டது.
உடற் கூறு பரிசோதனைக்காக சடலம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
இச்சம்பவம் பற்றி காத்தான்குடிப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

1 hours ago
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
7 hours ago