Suganthini Ratnam / 2016 நவம்பர் 25 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறுப் பிரதேசத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நேற்று வியாழக்கிழமை தங்க நகைகளும் பணமும் திருட்டுப் போயுள்ளதாக களுவாஞ்சிக்குடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வீட்டின் பின்பகுதியை உடைத்துக்கொண்டு உள்நுழைந்த திருடர்கள், 12 பவுன் தங்க நகைகளையும் 72,000 ரூபாய் பணத்தையும் திருடிச் சென்றுள்ளதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களான கணவனும் மனைவியும் குறித்த வீட்டில் வசித்துவந்த நிலையில், இவர்கள்; இருவரும் வீட்டைப் பூட்டிவிட்டு பாடசாலைக்கு சென்றிருந்த வேளையிலேயே இத்திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
3 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
21 Dec 2025