2025 மே 06, செவ்வாய்க்கிழமை

களுவாஞ்சிக்குடியில் மாபெரும் ஊர்வலம்

Niroshini   / 2015 நவம்பர் 01 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு களுவாஞ்சிகுடி பொது நூலகத்தின் ஏற்பாட்டில் நூலகத்தின் வளர்ச்சியினை நோக்காகவும் நூலகத்துக்கும் வாசகர்களுக்கும் இடையில் தொடர்புகளை அதிகரிக்கும் முகமாகவும்  இன்று காலை 9.30 மணியளவில் களுவாஞ்சிகுடி பொது நூலக வாசகர் வட்டத்தின் தலைவர் ந.புருஷோத்தமன் தலைமையில் நூல்கள் சேகரிக்கும் மாபெரும் ஊர்வலம் களுவாஞ்சிக்குடி நகரில் இடம்பெற்றது.

களுவாஞ்சிகுடி பல்கழைக்கழக சமூக கல்வி ஒன்றியத்தின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இந் நிழ்வில் களுவாஞ்சிகுடி பொது நூலக வாசகர் வட்ட ஆலோசகரும் பிரித்தானிய நலன்புரிச் சங்க தலைவருமான மு.யோகநாதன், முகாமை ஆலய பரிபாலன சபையின் வண்ணக்கரும் அதிபருமான நா.நாகேந்திரன், நூலகத்தின் நூலகர் யு.எல்.நஸீரா மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது,களுவாஞ்சிகுடி மக்களினால் நூலகத்தின் வளர்ச்சிக்காக ஒரு தொகைப் புத்தகங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டதுடன் நிதி உதவிகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X