Mayu / 2024 ஜூன் 04 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருல் ஹுதா உமர்
தேசிய சுற்றுச்சூழல் வாரத்தினை முன்னிட்டு ஜூன் 03 சுற்றாடல் தூய்மைப்படுத்தல் தினம் என்பதற்கமைய காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் காரைதீவு பிரதேச செயலகம், காரைதீவு பிரதேச சபை, காரைதீவு சுகாதார வைத்திய அலுவலகத்தினர், காரைதீவு பொலிஸ் நிலையம் மற்றும் பொதுமக்கள் சிறந்த ஒத்துழைப்போடு சிரமதான நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது காரைதீவு-02, 03, 05 ம் பிரிவுகளின் தோணாவின் சூழலை தூய்மையாக்கப்பட்டதுடன் காரைதீவு-09 வெட்டு வாய்க்கால் முகத்துவாரப் பகுதியில் முறைகேடாக குப்பை கூழங்கள் கொட்டப்பட்டு மிகவும் மோசமான முறையில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு காணப்படும் இடத்தினை தூய்மையாக்கல் சிறந்த முறையில் இடம் பெற்றது.
இதன் போது காரைதீவு பிரதேச சபை ஆளணியினர் மற்றும் வாகன வசதிகள் வழங்கி இருந்ததுடன் காரைதீவு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், காரைதீவு பிரதேச சபை, காரைதீவு சுகாதார வைத்திய அலுவலகத்தினர், காரைதீவு பொலிஸ் நிலைய பொலிஸார் என பலரும் கலந்து கொண்டனர்.





2 hours ago
23 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
23 Dec 2025