Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 ஜூன் 03 , பி.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி, ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்களை, சுகாதார நடவடிக்கை மூலம் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் பொருட்டு, மாணவர்களின் பெற்றோர்களை விழிப்பூட்டும் விசேட செயலமர்வுகள் தற்பொழுது நடத்தப்பட்டு வருகின்றன.
பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டால் மாணவர்கள் கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வளிமுறைகள் பற்றி இதன்போது தெளிவுபடுத்தப்படுவதுடன், தமது பிள்ளைகளுக்கு அவதானமாக பின்பற்ற அறிவூட்டுமாறும் இதன்போது கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
இதன்படி, மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி, வின்சென்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலைகளில், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் எம். அச்சுதனின் வழிகாட்டுதலில், புளியந்தீவு பிரதேச பொது சுகாதார பரிசோதகர் ஏ.ராஜ்குமார் தலைமையில், இவ்வாறான பெற்றோரை விழிப்பூட்டும் செயலமர்வுகள், நேற்று (02) நடைபெற்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
01 May 2025