2025 மே 07, புதன்கிழமை

கொரோனாவால் மேலும் ஒருவர் மரணம்

Princiya Dixci   / 2021 மே 28 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆண் ஒருவர், நேற்று (27)  உயிரிழந்துள்ளதையடுத்து, மாவட்டத்தில் கொரோனா மரண எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன்  தெரிவித்தார். 

போதனா வைத்தியசாலையின் கொரோனா பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள பெரியபோரதீவு பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய ஆணொருவரே உயிரிழந்துள்ளார்.

அதேவேளை, மூன்றாவது கொரோனா வைரஸ் அலையில் 17 பேர் உயிரிழந்துள்ளதையடுத்து 26ஆக அதிகதித்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X