2025 மே 19, திங்கட்கிழமை

சமுர்த்தி பயனாளிகளின் உற்பத்தி பொருட்கள் விற்பனை நிலையம் திறப்பு

Editorial   / 2018 ஜனவரி 19 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மண்முனை  வடக்கு பிரதேச செயலக அலுவலகமும், சமுர்த்தி பயனாளிகளின் உற்பத்தி பொருட்கள் விற்பனை நிலையமும் மாவட்ட அரசாங்க அதிபரினால் திறந்து வைக்கப்பட்டது .

ஐரோப்பிய யூனியன் மற்றும் ஐரோப்பிய அபிவிருத்தி ஒன்றியத்தின் நிதி உதவியின் கீழ் இலங்கையில் முதல் முன்னக அலுவலகமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை  வடக்கு பிரதேச செயலகத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமாரினால்  திறந்து வைக்கப்பட்டது .

தேவைகளை நாடிவரும் மக்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும்  இடையேயுள்ள இடைவெளியினை குறைக்கவும்  மக்களுக்கான வினைத்திறன் மிக்க சேவையை வழங்க முகமாக பிரதேச செயலகத்தினால் நடைமுறைப்படுத்துகின்ற வேலைத்திட்டம்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

இந்நிகழ்வின் போது இரண்டாம் கட்ட திட்ட அபிவிருத்திக்கான முன்மொழிவு ஆவணங்களும்  மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X