Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2019 செப்டெம்பர் 29 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் சிறுவர் தினம் கொண்டாடப்படும் நாளை மறுதினத்தில் (01), மட்டக்களப்பு - மண்முனைப் பற்று பிரதேசத்திலுள்ள ஆரையம்பதி சிறுவர் பூங்காவை, சிறுவர்கள் இலவசமாகப் பயன் படுத்த முடியுமென, மண்முனைப் பற்று பிரதேச சபை ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இது தொடர்பான முன்மொழிவொன்றை, மண்முனைப் பற்று பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.முகம்மட் நசீம் முன் வைத்தார்.
இந்த முன் மொழிவு சபை உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதையடுத்து, சிறுவர் தினத்தன்று (ஒக்.01), அங்குள்ள விளையாட்டு உபகரணங்களை, சிறுவர்கள் இலவசமாகப் பயன்படுத்த முடியுமெனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக, முகம்மட் நசீம் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago