2025 ஜூன் 21, சனிக்கிழமை

சுற்றுலாத்துறையை மேம்படுத்த சைக்கிளோட்டம்

அப்துல்சலாம் யாசீம்   / 2018 ஏப்ரல் 25 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

"ஸ்ரீ லங்கா டீ கப்" சைக்கிளோட்டம், பாசிக்குடா மெரீன் ஹோட்டல் வளாகத்திலிருந்து, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவால், எதிர்வரும் மே மாதம் 04ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
விளையாட்டுத்துறையின் மூலம் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில், LANKA SPORTREIZEN எனும் அமைப்பால், 18 மில்லியன் ரூபாய் நிதியொதிக்கீட்டின் கீழ், இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென, அவ்வமைப்பின் தலைவர் பீ.டி.வீரசிங்ஹ தெரிவித்தார்.
இந்தச் சைக்கிளோட்டம், பாசிக்குடாவிலிருந்து மஹியங்கனை ஊடாகக் கண்டிக்குக் சென்று, கண்டியிலிருந்து நீர்கொழும்பை, மே மாதம் 06ஆம் திகதி சென்றடையவுள்ளதென, ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இச்சைக்கிளோட்டப் போட்டியில் 70 வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .