2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

சுவாமி விபுலானந்தரின் ஜனன தின நிகழ்வு அனுஷ்டிப்பு

Editorial   / 2020 மே 03 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 128ஆவது பிறந்த தின நிகழ்வு, மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு, நீரூற்று பூங்காவிலுள்ள அடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து, இன்று (03) அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், மாநகர மேயர் தி.சரவணபவன், சுவாமி விபுலானந்த நூற்றாண்டு விழாச் சபைத் தலைவர் க.பாஸ்கரன், மாநகர சபை உறுப்பினர் சிவம் பாக்கியநாதன், மாநகர சமூக மேம்பாட்டு உத்தியோகத்தர் எஸ்.சந்திரகுமார், மாநகர தீயணைப்புப் பிரிவின் முகாமையாளர் பிரதீபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X