Freelancer / 2022 பெப்ரவரி 17 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
காரைதீவு நிருபர் சகா
சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டு தற்போது சிதைந்து கிடக்கின்ற, மடத்தடி சிவன் ஆலய முன்றலில் சிவலிங்கம் நிறுவுவதற்கான பீடமொன்றுக்கு அடிக்கல் நடும் வைபவம் நேற்று (16) நடைபெற்றது.
அத்துடன், அருகிலுள்ள மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் புதிதாக அம்மன் அன்னதான மண்டபத்தை அமைப்பதற்கான அடிக்கல் நடுவிழாவும் நடைபெற்றது.
அடிக்கல் நடப்பட்ட பீடத்தில் சிவனருள் பவுண்டேசன் அனுசரணையில் மட்டக்களப்பு ஆதீன ஸ்தாபகரும் இயக்குனருமான மு.ஜெயபாலனின் ஏற்பாட்டில் எதிர்வரும் சிவராத்திரியன்று சிவலிங்கம் பிரதிஸ்டை செய்துவைக்கப்படவிருக்கிறது.
பௌர்ணமி தினமாகையால் நேற்று பெருந்தொகையான அம்மன் அடியார்களும் கலந்துகொண்டு பொங்கிப்படைத்து அன்னதானம் வழங்கி அம்மனை வழிப்பட்டனர்.
3 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago