2025 மே 06, செவ்வாய்க்கிழமை

தாக்குதலுக்கு மட்டு. உயர் தேசிய கணக்கீட்டு கற்கைநெறி மாணவர்கள் எதிர்ப்பு

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 01 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கணக்கியல் உயர் டிப்ளோமா மாணவர்களால் கொழும்பில் கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து மட்டக்களப்பு உயர் தேசிய கணக்கீட்டு கற்கைநெறி மாணவர்கள்  திங்கட்கிழமை அமைதியான முறையில் எதிர்ப்பை வெளியிடவுள்ளதாக மாணவர் ஒன்றியம் தெரிவித்தது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட உரிமை மீறல்களையும் அத்துமீறல்களையும் கண்டித்தும் உயர் தேசிய கணக்கீட்டு கற்கைநெறி தொடர்பான தமது உரிமை கோரிக்கைகளை வலுப்படுத்தி அதற்கான தீர்வை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் இதன்போது வலியுறுத்தப்படவுள்ளது.  

மட்டக்களப்பு உயர் கல்வியகத்தை சேர்ந்த முழு, பகுதிநேர மாணவர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளதாகவும் அந்த ஒன்றியம் தெரிவித்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X