2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

தாய்ப்பால் புரைக்கேறி குழந்தை உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 29 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள தளவாய்க் கிராமத்தில் தாய்ப்பால் புரைக்கேறியதால், பிறந்து மூன்று மாதங்களேயான குழந்தை ஒன்று  செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

தளவாய்க் கிராமத்தைச் சேர்ந்த விஜயகாந்த் தனுக்ஷன் என்ற ஆண் குழந்தையே உயிரிழந்துள்ளது.

குழந்தை அழுதபோது, அக்குழந்தைக்குத் தாய்ப்பால் அருந்தக் கொடுத்து படுக்க வைத்ததாகவும் காலையில் எழுந்து பார்த்தபோது,  குழந்தை உயிரிழந்து காணப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X