எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 ஏப்ரல் 10 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, ஏறாவூர் - 04 பெரிய தம்பிரான் கோவில் வீதியில், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றவரை ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம், நேற்று (09) அதிகாலை 01 மணியாளவில் நடைப்பெற்றதுடன், குறித்த பெண்ணினால் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை அடுத்து, ஏறாவூர் பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவினர் சந்தேக நபரை கைது செய்ததுடன், அவரிடம் இருந்து கொள்ளையிடப்பட்ட தங்கச் சங்கியியையும் மீட்டுள்ளனர்.
சந்தேக நபரை, நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago