Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 01 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எம்.அஹமட் அனாம், ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, பாசிக்குடா கடலில் குளித்துக்கொண்டிருந்த பௌத்த தேரர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் முதலாமாண்டு மாணவரான குருநாகலைச் சேர்ந்த சந்திரானந்த ஹிமி (வயது 22) என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
சுற்றுலா மேற்கொண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தை சேர்ந்த 34 பௌத்த பிக்கு மாணவர்கள் பல இடங்களுக்கும் சென்று நேற்று செவ்வாய்க்கிழமை பாசிக்குடாவுக்கு வந்ததாகவும் பொலிஸார் கூறினர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .