Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி நகரசபைப் பிரிவில் கடந்த நான்கு தினங்களில் டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு காரணமாக இருந்த 15 வெற்றுக்காணிகளை நகரசபை சுவீகரித்துள்ளதாக அதன் செயலாளர் ஜே.சர்வேஸ்வரன், இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
டெங்கு நுளம்புகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் காத்தான்குடி நகரசபை ஊழியர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.இதன்போது, புதிய காத்தான்குடி கடற்கரை வீதியில் துப்புரவின்றி நுளம்புகள் பெருகுவதற்கு காரணமாக இருந்த காணிகளே சுவீகரிக்கப்பட்டு, அறிவித்தல் பலகைகளும்; இடப்பட்டுள்ளன.
இது தொடர்பில் குறித்த காணிகளின் சொந்தக்காரர்களுக்கு காத்தான்குடி நகரசபை அறிவித்ததுடன், ஒரு வாரத்தினுள் அக்காணிகளை துப்புரவு செய்து நகரசபை ஊழியர்களுக்கு காட்ட வேண்டும். இதன் பின்னர் அக்காணிகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படும்.
குறித்த கால எல்லைக்குள் காணிகளை சுத்தம் செய்யாவிடின், அக்காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படுமென்பதுடன், சுவீகரிக்கப்பட்ட காணிகளை அரசாங்கக் காணிகளாக அடையாளப்படுத்த வேண்டி ஏற்படலாமெனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago
9 hours ago