2025 மே 19, திங்கட்கிழமை

நாட்டை மீட்க கை கோர்க்குமாறு மஹிந்த அழைப்பு

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 ஜனவரி 27 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பின்னோக்கிச் செல்லும் இலங்கை நாட்டை மீட்க அனைவரையும் கை கோர்க்குமாறு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம்,  காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் நேற்று (26) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர் தெரிவித்ததாவது,

“இன்று நாட்டில் தேங்காய் விலை அதிகரித்துள்ளது. அரிசி, பருப்பு, சீனி என அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.

“எங்கள் மீது பொய்யான பிரசாரங்களை கூறி, ஆட்சியைப் பிடித்தார்கள்.

“இந்தப் பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டவர்கள் நாங்கள் தான்.

“கடந்த முப்பது வருட கால யுத்தத்தில் நாம் பட்ட துன்பங்களை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். நமது மார்க்கக் கடமைகளைக் கூட பாதுகாப்போடுதான் செய்ய வேண்டியிருந்தது.

“இந்தச் சூழ் நிலையில்தான் சுனாமி அனர்த்தமும் இந்தப் பிரதேசத்தில் ஏற்பட்டது. யுத்தத்தின் அழிவுகளையும் சுனாமி அனர்தத்தின் அழிவுகளையும் நாம் புனரமைப்பு செய்து, இந்த நாட்டில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொண்டோம்.

“பிள்ளைகள், பாடசாலைகளுக்கு செல்ல முடியாத நிலை இருந்தது. இன்று பல்கலைக்கழகத்துக்கு அச்சமில்லாமல் சென்று வரக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

“இன்றைய அரசாங்கம், எதை செய்துள்ளது? நாங்கள் வீதிகளை செப்பணிட்டோம், அபிவிருத்தி செய்தோம், நீர் விநியோகத்தை மேற்கொண்டோம், மின் சாரத்தை வழங்கினோம். இந்த நிலையில் தான் எங்கள் மீது தடை ஏற்பட்டது.

“கடந்த மூன்று வருடங்களாக எந்த அபிவிருத்தியுமில்லாத மந்த கதியில் நாடு காணப்படுகின்றது.

உலகத்தில் எங்கும் இடம்பெறாத பாரிய கொள்ளை, இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற கொள்ளையாகும். இதனால் நாட்டு மக்கள் வட்டி செலுத்த வேண்டிய நிலைய ஏற்பட்டுள்ளது.

“வேலை வாய்ப்புக்கள் இல்லை. இதனால் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மக்கள் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர்.

“உலகிலேயே முன்னேற்றமான நாடாக இலங்கை காணப்பட்டது. ஆனால், இன்று இந்த அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கை, இலங்கைக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

“ஒருவொருக்கொருவர் கை கோர்த்து செயற்பட வேண்டிய தேவை இருக்கின்றது. எனவே, எங்களோடு கை கோர்த்துக் கொள்ளுங்கள். உங்களோடு என்றுமிருப்போம். உங்களுக்கு உதவுவோம்” என மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X