2025 மே 07, புதன்கிழமை

பிரதீப் மாஸ்டருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 18 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,எம்.எஸ்.எம்.நூர்தீன்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்  முன்னாள் தேசிய அமைப்பாளரான பிரதீப் மாஸ்டர் எனப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா மற்றும் கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் ஆகியோரை  எதிர்வரும் இரண்டாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு  நீதவான்  நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் இன்று புதன்கிழமை உத்தரவிட்டார்.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் இந்தச்  சந்தேக நபர்கள் இருவரும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கடந்த மாதம் 7ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு,  04.11.2015 அன்று மட்டக்களப்பு  நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது இருவரும் மஜிஸ்திரேட் முன்னிலையில் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர். இதனைத் தொடர்ந்து இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம்  2005ஆம் மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் நத்தார் நள்ளிரவு ஆராதனையின்போது சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார் .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X